புதுவை மாநிலம் முழுவதும் ஆயிரத்து 99 வாக்குச்சவாடிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடந்தது.
இதில் புதுவை மிஷன் வீதியில் உள்ள வஉசி பள்ளியில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் தென்னங்கூரைகளால் பசுமை பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. வாக்காளர்கள் அமர இருக்கைகளும் போடப்பட்டிருந்தது.
சாவடிக்குள் நுழையும் வாக்காளர்களை பெண் வேடமிட்ட ரோபோ பூக்கள் கொடுத்து வரவேற்றது. இந்த வரவேற்பு வாக்காளர்களை கவர்ந்தது.