புதுச்சேரி:
முத்தியால் பேட்டை தொகுதி, சோலை நகர் வீதியில் உள்ள தனலட்சுமி கார்டன் மற்றும் அதன் வரிவாக்கம் பகுதியில் சாலை அமைக்க பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ., தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7.5 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.
அதனைத் தொடர்ந்து புதுவை நகராட்சி சார்பில் புதிய சாலை அமைக்கும் பணியை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் புதுவை நகராட்சி செயற்பொ றியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனிராஜா, இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.