கோழி வளர்ப்பு பற்றிய செயல்விளக்கம் நடைபெற்ற காட்சி. 
புதுச்சேரி

விவசாய ஆர்வலர் குழுவிற்கு கோழி வழங்கல்

புதுவை அருகே சன்னியாசிக்குப்பம் கிராமத்தில் கொல்லைப்புற கோழி வளர்ப்பு பற்றிய செயல்விளக்கம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்ஷயை கால்நடை வளர்ப்பு ஆர்வலர்கள் 20 பேருக்கு தலா 2 பெறுவிடை கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டது.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஆத்மா திட்டத்தின் மூலம் மதகடிப்பட்டு பண்ணைத்தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் சன்னியாசிக்குப்பம் கிராமத்தில் கொல்லைப்புற கோழி வளர்ப்பு பற்றிய செயல்விளக்கம் நடைபெற்றது.

வேளாண் அலுவலர் நடராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சி யை கால்நடை வளர்ப்பு ஆர்வலர்கள் 20 பேருக்கு தலா 2 பெறுவிடை கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டது

இந்த செயல்விளக்க முகாமின் ஏற்பாடுகளை ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, உதவி வேளாண் அலுவலர் பக்கிரி, கிராம விரிவாக்கப் பணியாளர் புவனேஷ்வரி செயல்விளக்க உதவியாளர் வள்ளியம்மாள், அலுவலக உதவியாளர் விஜயகுமார் , சண்முகம் ஆகியோர் செய்திருந்தனர்.