புதுவை ராஜ்பவன் தொகுதி எல்லையம்மன் கோவில் வீதியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வசித்து வருகிறார்.
அவர் இன்று காலை மிஷன் வீதியில் உள்ள வஉசி பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் எழுச்சி உள்ளது. ஸ்டாலின், ராகுல் புதுவைக்கு வந்து பிரசாரம் செய்து வாக்குறுதி அளித்ததின் எதிரொலியாக மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதுவையில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.