தங்கதேரில் மணக்குள விநாயகர் உலா வந்த காட்சி. 
புதுச்சேரி

தங்கதேரில் மணக்குள விநாயகர் உலா

புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் திருப்பள்ளியெழுச்சி குழுவினர் சார்பில் 25-ம் ஆண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்பட்டது. தங்கத்தேரில் விநாயகர் கோவிலில் வலம் வந்தார்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் திருப்பள்ளியெழுச்சி குழுவினர் சார்பில் 25-ம் ஆண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருப்பள்ளி அறையில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது

தொடர்ந்து, தங்கத்தேரில் விநாயகர் கோவிலில் வலம் வந்தார்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை திருப்பள்ளியெழுச்சி தலைவர் இளங்கோ மற்றும் கோவில் நிர்வாக தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.