புதுவை சட்டமன்றத்தில் நடந்த எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவில் காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஜோஸ் சார்லஸ் மார்டின் தாயாரும், திருச்சி லால்குடி அதிமுக எம்எல்ஏவுமான லீமா ரோஸ் கேலரியில் அமர்ந்து பார்த்தார்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தார். பின்பு நிருபர்களிடம் லீமா ரோஸ் கூறியதாவது:-
எனது மகன் எம்எல்ஏவானது சந்தோஷம். அவர் அமைச்சராவது பற்றி சொல்வார்கள். மக்களுக்கு நல்லது செய்ய எங்கள் குடும்பத்தினர் அரசியலுக்கு வந்துள்ளோம்.
நான் அமைச்சராவது இறைவன் சித்தம்தான். தவெக அமைச்சரவையில் 8 அமைச்சர்கள் கோரியுள்ளதாக தவறாக யூடியூப்பில் போடுகிறார்கள். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவதூறாக பேசுவோர் மீது நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் உள்ளோம் என்றார்.