புதுச்சேரி:
பாகூர் கொம்யூன் கீழ்பரிக்கல் பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் புதுவை அரசு கல்வித்துறையின் மூலம் நடைபெற்ற மண்டல மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை காண களப்பயணம் மேற்கொண்டனர்.
இதில் 9-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 6,7,8ஆகிய வகுப்புகளில் இருந்து தலா 4பேர் வீதம் 12 பேர் சென்றனர்.
மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் வழியனுப்பி வைத்தார். அறிவியல் ஆசிரியை வரலட்சுமி, வில்லியம், பள்ளி பொறுப்பா சிரியர் துரைசாமி, உடற்கல்வி ஆசிரியை ஜெயபாரதி, சரண்யா ஆகியோர் மாணவர்களை அழைத்து சென்றனர்.