மண் பானையில் பொங்கலிட்ட ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் 
புதுச்சேரி

புதுவையில் மண்பானையில் பொங்கலிட்ட ஐரோப்பிய சுற்றுலா பயணிகள்

துத்திப்பட்டில் உள்ள ஒலாந்திரியா வேளாண் பண்ணையில் பொங்கல் விழா வண்ணமயமாக கொண்டாடப்பட்டது. வண்ண கோலமிட்டு, கரும்பு கொட்டகையில் விளக்கேற்றி வழிபட்டு மண் பானையில் வெளிநாட்டவர் பொங்கல் வைத்தனர்.

Suresh K Jangir

புதுச்சேரி:

புதுவையில் செயல்படும் ஒலாந்திரியா தொண்டு நிறுவனத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும்.

துத்திப்பட்டில் உள்ள ஒலாந்திரியா வேளாண் பண்ணையில் பொங்கல் விழா வண்ணமயமாக கொண்டாடப்பட்டது. இதில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

இவர்களை ஒலாந்திரியா இயக்குனர் செந்தில்குமரன், துணை இயக்குனர் சாந்தி ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர். சுற்றுலா பெண் பயணிகளில் சிலர் சேலை அணிந்திருந்தனர். வண்ண கோலமிட்டு, கரும்பு கொட்டகையில் விளக்கேற்றி வழிபட்டு மண் பானையில் வெளிநாட்டவர் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கியபோது பொங்கலோ பொங்கல் என முழங்கினர்.

பின்னர், மாட்டு வண்டியில் ஊர்வலமாக கிராமத்தை வலம் வந்தனர். உள்ளூர் கலைஞர்கள் நடத்திய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடனமாடினர்.