மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த பொறியாளர் தின விழாவில் மாணவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 
புதுச்சேரி

மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் பொறியாளர் தின விழா

தேசிய அளவிலான இன்னவேட்டர்ஸ் தின நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களும் திட்டங்களை சமர்ப்பித்தனர்.விழாவில் வெற்றிபெற்ற மாணவர் களுக்கு காசோலை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாலை மலர்

புதுச்சேரி:

மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் பொறியாளர் தினம் இன்னவேட்டர்ஸ் தினமாக கொண்டாடப் பட்டது.

2 நாட்களாக நடை பெற்ற தேசிய அளவிலான இன்னவேட்டர்ஸ் தின நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களும் திட்டங்களை சமர்ப்பித்தனர்.

மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலை வர் மற்றும் மேலாண் இயக் குநர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்த லைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி இயக் குனர் வெங்கடாசலபதி வரவேற்றார். தலைமை விருந்தினராக லெனோவா நிறுவனத்தின் இயக்குனர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்டார்.

கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப் பாட்டாளர் ஜெயகுமார், அகாடமிக் டீன்கள் அன் புமலர், அறிவழகர், கல்லூரி ஆராய்ச்சி துறையின் டீன் வேல்முருகன், வேலை வாய்ப்புத்துறை அதிகாரி கைலாசம், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் முதல்வர் மனோகரன், கலை அறிவியல் கல்லூரி டீன் முத்து லட்சுமி, அலைடு ஹெல்த் சயின்ஸ் டீன் கோபால், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை த்துறை டீன் முகம்மது யாசின், சட்ட கல்வித்துறை சந்திரசேகர், பிசியோதெரபி டீன் சிதம்பரம், பார்மஸி டீன் தனலட்சுமி மற்றும் எஸ்.எம்.வி ஸ்கூல் முதல்வர் அனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் வெற்றிபெற்ற மாணவர் களுக்கு காசோலை, சான்றிதழ் வழங்கப்பட்டது.