எடப்பாடி பழனிச்சாமிக்கு புதுவை அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெள்ளி வேல் வழங்கி வாழ்த்து தெரிவித்த காட்சி. 
புதுச்சேரி

எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளி வேல்-அன்பழகன் வழங்கினார்

மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் இடைக்கால பொதுசெயலாளரை பழனிசாமியை சந்தித்து நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தனர்.புதுவை மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில இணை செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதையொட்டி புதுவை மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் இடைக்கால பொதுசெயலாளரை பழனிசாமியை சந்தித்து நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தனர்.

அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு மாநில செயலாளர் அன்பழகன் வெள்ளி வேல் மற்றும் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார் .

இந்த சந்திப்பின் போது புதுவை மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில இணை செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணை செயலாளர்கள் நாகமணி, எம்.ஏ.கே.கருணாநிதி, குமுதன், காந்தி, நகர செயலாளர்கள் அன்பழகன் உடையார், சித்தானந்தம், மேற்கு மாநில எம். ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலய இளங்கோ, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, தொகுதி செயலாளர்கள் சம்பத், கமல்தாஸ், வேலவன், முன்னாள் மாணவர் அணி பொருளாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.