5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார்.
அதன்படி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களுக்கு ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடக்கும் தேதி அன்றே புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு புதுச்சேரி காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.