கோப்பு படம். 
புதுச்சேரி

சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்துடன் சுற்றுலா சங்கம் இணைப்பு

ஆலோசகர் மோகன கிருஷ்னண் தலைமையில் இணைந்து செயல்பட முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றினர். பதவி உயர்வு உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை சுற்றுலா வளர்ச்சி கழக கேட்டரிங் மற்றும் நீர்விளையாட்டு ஊழியர்கள் சங்கம், புதுவை மாநில சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மையத்துடன் இணையும் விழா முதலியார்பேட்டை பாரதி மில் அருகே உள்ள சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் நடந்தது.

கேட்டரிங் ஊழியர்கள் சங்க தலைவர் ஆதிகணேசன், நீர்விளையாட்டு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் முகுந்தன், பழனிவேல் தீர்த்தபதி ஆகியோர் தலைமையில் சி.ஐ.டி.யூ. பொறுப்பாளர்கள் சீனிவாசன், கௌஞ்சியப்பன், பிரபுராஜ் முன்னிலையில் ஆலோசகர் மோகன கிருஷ்னண் தலைமையில் இணைந்து செயல்பட முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றினர்.

தொடர்ந்து மே தின கொண்டாட்டம், பதவி உயர்வு உட்பட கோரிக்கை களை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் பழனி, சேரன், தீர்த்தபதி, பார்த்தசாரதி, பாபு, முத்தால், வெங்கடேஷன், பழனிவேல், கருணாமூர்த்தி, எழிலரசன். பூபதி, நாகராஜ், ஜெயக்குமார், பாலசுப்ரமணி, பார்த்தசாரதி, சிவஞானம், கல்யாண சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.