சாய்பாபா கோவிலில் 5-ம் ஆண்டு பால்குட அபிஷேகம் நடைபெற்ற காட்சி. 
புதுச்சேரி

சாய்பாபாவுக்கு பாலாபிஷேகம்

கோரிமேடு அருகே பட்டனூரில் உள்ள ஓம் ஸ்ரீ வழி காட்டும் சாய்பாபா கோவிலில் 5-ம் ஆண்டு பால்குட அபிஷேகம் நடைபெற்றது.அதைத்தொடர்ந்து 12 மணிக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் பாபா பிரசாதம் வழங்கப்பட்டது.

மாலை மலர்

புதுச்சேரி:

கோரிமேடு அருகே பட்டனூரில் உள்ள ஓம் ஸ்ரீ வழி காட்டும் சாய்பாபா கோவிலில் 5-ம் ஆண்டு பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவரும் மஞ்சள் ஆடை உடுத்தி பாபா மாலை அணிந்து 9 நாள் விரதம் இருந்து பால்குடம் சுமந்து வந்து கருவறைக்குள் சென்று தங்கள் கைகளாலே பாபாவிற்கு பசும்பால் அபிஷேகம் செய்தனர்.

இந்த அபிஷேகம் செய்தபோது பாபாவின் உருவசிலை நீல நிறமாக மாறியது கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தார்கள் .

அதைத்தொடர்ந்து 12 மணிக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் பாபா பிரசாதம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி சாய் சசி அம்மையார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.