அங்காளன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு திறந்து வைத்தார். 
புதுச்சேரி

குடிநீர் பற்றாக்குறையை போக்க அங்காளன் எம்.எல்.ஏ. நடவடிக்கை

பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ அங்காளனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர்கள் பாஸ்கர், மனோகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு பாளையம், திருபுவனை பாளையம் ஆகிய பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை இருந்து வந்தது.

இப்பகுதிக்கு புதிய ஆழ்துளை குழாய் அமைத்து குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ அங்காளனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியின் குடிநீர் தேவையை போக்க பொதுப்பணி துறையின் மூலம் ரூ.12 லட்சத்து 84 நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டு தற்பொழுது பொது மக்களின் பயன் பாட்டிற்காக திறந்து வைக்கப்

பட்டது. இந்நிகழ்ச்சியில் அங்காளன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், கிராம குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பீனாரணி, இளநிலை பொறியாளர் சுதர்சனம், மண்ணாடி பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர்கள் பாஸ்கர், மனோகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.