நாராயணசாமி 
செய்திகள்

மத்திய அரசின் உதவியில்லாமல் 5 துறைகளில் புதுச்சேரி முதலிடம்- நாராயணசாமி

மத்திய அரசின் நிதியுதவி உள்ளிட்ட எந்தவித உதவியும் இல்லாமல் புதுச்சேரி 5 துறைகளில் முதலிடம் பிடித்துள்ளது என மாநில முதல்வர் நாராயணசாமி கூறினார்.

மாலை மலர்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டி வருமாறு:-

சிறந்த நிர்வாகம், மனித வளம், மருத்துவம் உள்ளிட்ட 5 துறைகளில் புதுச்சேரி முதலிடம் பிடித்துள்ளது. மத்திய அரசின் நிதி உள்ளிட்ட எந்தவித உதவியும் இல்லாமல் புதுச்சேரி 5 துறைகளில் முதலிடம் பிடித்துள்ளது. அரசுக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்தை பாராட்ட மனமில்லாதவராக கவர்னர் கிரண்பேடி உள்ளார்.

இவ்வாறு அவர்  கூறினார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் கேசினோ இருப்பது குறித்து கிரண்பேடி கேள்வி எழுப்பாதது ஏன்? என்றும் நாராயணசாமி சுட்டிக்காட்டினார்.