செய்திகள்

காரைக்காலில் விவசாயியாக மாறி வயலில் இறங்கி நாற்று நட்ட அமைச்சர்

புதுவை வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் காரைக்காலில் தனது விவசாய நிலத்தில் இறங்கி நாற்று நடும் பணியில் ஈடுபட்டதை கண்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவரை பாராட்டினர். #MinisterKamalakannan

மாலை மலர்

புதுவை வேளாண்துறை அமைச்சராக இருப்பவர் கமலக்கண்ணன். விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.

இவர் அமைச்சராக இருந்தாலும் எளிமையாக காணப்படுவார். அமைச்சர் பணி ஒருபுறம் இருந்தாலும் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் காரைக்கால் அம்பகரத்தூரில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு சென்று விவசாய பணிகளில் ஈடுபடுவார். அதன்படி அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று காரைக்கால் அம்பகரத்தூரில் இருக்கும் விவசாய நிலத்துக்கு சென்றார். வேட்டி- சட்டையை கழற்றி விட்டு சாதாரண விவசாயி போல் கைலி அணிந்து கொண்டார்.

இது குறித்து அமைச்சர் கமலக்கண்ணன் கூறும்போது, நான் அமைச்சராக இருந்தாலும் அடிப்படையில் விவசாயி தான். விவசாயம் செய்வது எனக்கு பிடிக்கும்.