செய்திகள்

சபரிமலை பகுதியில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள சுற்றுப்புற பகுதியில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #Sabarimala #SabarimalaProhibition

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

இதனால், ஐயப்பன் கோவில் அமைந்திருக்கும் சபரிமலையை சுற்றியுள்ள பம்பை, இலவுங்கல், நிலக்கல், சன்னிதானம்  உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதத்தில் இருந்து 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட அறிக்கை மற்றும் மாஜிஸ்திரேட்களின் கருத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #Sabarimala  #SabarimalaProhibition