உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள உம்பா கிராமத்தில் கடந்த மாதம் (ஜூன் 17) நில தகராறு காரணமாக இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் பழங்குடியின மக்கள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 21 பேர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆதரவு கூற காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநில கிழக்குப்பகுதி பொறுப்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி கடந்த மாதம் சோன்பத்ராவுக்கு பயணம் மேற்கொண்டார்.
ஆனால், போலீசார் அவரை அனுமதிக்கவில்லை, அதனை தொடர்ந்து கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் இங்கிருந்து போவதில்லை என கூறி தொண்டர்களுடன் இணைந்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.