செய்திகள்

திருமங்கலம் அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

திருமங்கலம் அருகே முன்விரோதத்தில் வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படையை சேர்ந்தவர் கோகுலராமகிருஷ்ணன் (வயது32). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரவி (55) என்பவருக்கும் கருவேல மரங்கள் வெட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

அப்போது ரவி அரிவாளால் வெட்டியதில் கோகுல ராமகிருஷ்ணன் காயம் அடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.

இதேபோல் ஆஸ்டின்பட்டி அருகே உள்ள வேடர்புளியங்குளத்தைச் சேர்ந்தவர் பதினெட்டாம்படி கருப்பு (40). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த பழனியாண்டி (33) என்பவருக்கும் பொது பாதை தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.

சம்பவத்தன்று பழனியாண்டி தாக்கியதல் பதினெட்டாம்படி கருப்பு காயம் அடைந்தார்.

இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியாண்டியை கைது செய்தனர்.