செய்திகள்

அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டில் குடியேறும் பிரணாப் முகர்ஜி

இந்தியாவின் ஜனாதிபதி பதவியில் இருந்து நாளை ஓய்வு பெறும் பிரணாப் முகர்ஜி மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டில் வசிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ராம்நாத் கோவிந்த் வரும் 25-ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில் 25-7-2012 அன்று பதவியேற்ற தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை ஓய்வு பெறுகிறார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அவர்களது ஆயுள்காலம் வரை அவர்கள் விரும்பும் பகுதிகளில் வாடகை, மின்சாரம் மற்றும் குடீநீர் கட்டணம் இல்லாமல் வீடு வழங்கப்பட வேண்டும்.

SCROLL FOR NEXT