செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூரின் ‘ரோடு ஷோ’ ரத்து

மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரக்யா சிங் இன்று சாலை வழியாக பேரணி நடத்தி வாக்கு திரட்ட இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

அப்போது ‘‘கோட்சே தேசபக்தர்’’ என்று பதில்அளித்தார். மகாத்மா காந்தியை கொன்றவனை தேசபக்தர் என்பதா? என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் எழுப்பின.

மேலும், இந்திய தேர்தல் ஆணையம் மத்திய பிரதேச மாநில தேர்தல் ஆணையரிடம் இதுகுறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி கேட்டது. அதனடிப்படையில் இன்று மத்திய பிரதேச மாநில தேர்தல் ஆணையர் பிரக்யா சிங் தாகூர் பேசியது குறித்து முழு அறிக்கை தயார் செய்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.