செய்திகள்

பொத்தேரி ரெயில் நிலையம் அருகே இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை

செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாள முட்புதரில் இன்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாள முட்புதரில் இன்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக கிடந்தார்.

அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. கை, உடம்பிலும் காயங்கள் காணப்பட்டன.

அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. கறுப்பு கலரில் உடை அணிந்து இருந்தார்.

உடல் கிடந்த இடத்தில் ரத்த கறை இல்லை. மர்ம நபர்கள் அவரை கடத்தி கழுத்தை அறுத்து கொன்று இங்கு முட்புதரில் உடலை வீசி இருக்கலாம் என்று தெரிகிறது.

இதுகுறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.