வண்டலூர்:
மறைமலைநகர், கூடுவாஞ்சேரி துணை மின் நிலையங்களில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆகவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மறைமலைநகர் தொழிற்பேட்டை, காட்டாங்கொளத்தூர், திருக்கச்சூர், பேரமனூர், சட்டமங்கலம், சிங்கப்பெருமாள்கோவில், செங்குன்றம், மல்ரோஜாபுரம், பொத்தேரி, தைலாவரம், பெருமாட்டுநல்லூர், காயரம்பேடு, நந்திவரம், மகாலட்சுமி நகர், கோவிந்தராஜபுரம், கூடுவாஞ்சேரி டவுன், மாடம்பாக்கம், ஆதனூர், ஊரப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை மறைமலைநகர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.