ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர்கள், கார் டிரைவர்கள், அரசு துறை செயலாளர்கள், சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ-அரசு டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் உள்ளிட்ட 148 பேர் ஆஜராகி உள்ளனர்.
இவர்கள் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா, செந்தூர் பாண்டியன் சிலரிடம் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார்.
சசிகலா தனது தரப்பு வாக்குமூலத்தை வக்கீல் மூலம் ஆணையத்தில் சமர்ப்பித்து உள்ளார். தற்போது விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து அரசு எடுத்த நடவடிக்கை பற்றி விளக்கம் அளித்தார்.
இதை ஏற்று பொன்னையன் இன்று காலை ஆணையத்தில் ஆஜரானார். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது இவர் பத்திரிகை- தொலைக்காட்சிகளுக்கு அடிக்கடி பேட்டி கொடுத்த விவரங்களை வைத்து ஆணையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
யார் சொன்ன தகவலை வைத்து பேட்டி அளித்தீர்கள். அந்த தகவல் எல்லாம் உண்மைதானா? என்றும் கேட்கப்பட்டது. இதற்கு பொன்னையன் சொன்ன பதில்களை வாக்குமூலமாக ஆணையத்தில் பதிவு செய்தனர்.