செய்திகள்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் பொன்.மாணிக்கவேல் ஆய்வு

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் இன்று ஆய்வு செய்தார். #PonManickavel

மாலை மலர்

திருவொற்றியூர்:

சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கடத்தப்பட்ட சிலைகள், பிரதான கல்தூண்கள் ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் ‌கைப்பற்றி வைத்துள்ளனர்.

சென்னையில் 300-க்கும் மேற்பட்ட பிரதான பாதுகாக்கப்படவேண்டிய கற்கள் உள்ளன. இந்த கற்களை பாதுகாப்பாக வைக்க சிலை கடத்தல் தடுப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயில் உட்பட சில கோவில்களை தேர்வு செய்துள்ளனர்.

இதையொட்டி இன்று காலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன். மாணிக்கவேல் தலைமையில் உயர் அதிகாரிகள் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவிலில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது இங்கு பிரதான கற்களை பாதுகாப்பாக வைக்க முடியுமா என்பது குறித்து வருவாய்த் துறை, அறநிலைய துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். #PonManickavel