செய்திகள்

கேரளாவிற்கு புதுவை அரசு சார்பில் ரூ.1 கோடி நிதி- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #KeralaRain #PondicherryCM #Narayanasamy

மாலை மலர்

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இதுவரை 29 பேர் இறந்துள்ளனர். 22-க்கும் மேற்பட்ட அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் டெலிபோனில் பேசினேன். அப்போது கேரள மாநிலத்துக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறினேன். இதற்காக புதுவை மாநில அரசின் நிதியிலிருந்து ரூ. 1 கோடி வழங்க உள்ளோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க துணிகள், அரிசி, மருந்து மற்றும் நிவாரண பொருட்கள் ஆகியவற்றை தாராளமாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இதனை கேரள மாநில மக்களுக்கு அனுப்பி வைப்போம்.