டெல்லி போலீஸ் தலைமை அலுவலகத்தை போலீசார் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத தரம் தாழ்ந்த செயலாக உள்ளது. தலைநகரில் வக்கீல்களும், போலீசாரும் மோதலில் ஈடுபட்டு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தபோது உள்துறை அமைச்சகம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இந்த விவகாரத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா மவுனம் சாதிப்பது ஏன்? டெல்லியில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? என்பது குறித்து அவர் விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.