ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பறக்கும்படை அதிகாரியாக இருப்பவர் நாகரத்தினம். இவர் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அனுமதியின்றி அதிக வாகனங்களில் ஒன்று கூடி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.
அதன் பேரில் அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதேபோல் போடியில் அதிக வாகனங்கள் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வேட்பாளர் தங்கதமிழ் செல்வன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் கூடலூர் அருகே லோயர்கேம்ப் பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக லோயர்கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #ThangaTamilSelvan