பசு மாடுகள் கொலை 
செய்திகள்

பலாப்பழத்தில் விஷம் வைத்து 3 பசு மாடுகள் கொலை - விலங்குகளுக்கு தொடரும் சோகம்

கேரளாவில் வெடிவைத்து கர்ப்பிணி யானையை கொலை செய்தது போல், கர்நாடகாவில் மர்ம நபர்கள் பலாப்பழத்தில் விஷம் வைத்து 3 பசுமாடுகளை கொன்ற கொடூரம் நடந்துள்ளது.

மாலை மலர்

கேரளாவில் சமீபத்தில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிமருந்து வைத்த அன்னாசி பழத்தை சாப்பிட்டதால் வெடித்து சிதறி, பலத்த காயம் அடைந்தது. அந்த வலியை தாங்க முடியாமல் மூன்று நாட்களாக தண்ணீர் மூழ்கி நின்று பரிதாபமாக இறந்தது.

பன்றி வேட்டைக்காக கேரளாவில் இவ்வாறு வெடிமருந்தை வைத்து பயன்படுத்துவது வழக்கம். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் தாக்கம் மனதை விட்டு அகலுவதற்கு முன்பாக, இதே போன்ற சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.