புதுடெல்லி:
இமாச்சல பிரதேச முன்னாள் முதல்-மந்திரி வீர்பத்ரசிங் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து இருந்தது. இதேபோல சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து இருந்தது
இந்த நிலையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் வீர்பத்ரசிங், அவரது மனைவிக்கு டெல்லி சிறப்பு கோர்ட்டு இன்று ஜாமீன் வழங்கியது. #VirbhadraSingh