பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதிவரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் 46 மசோதாக்கள் நிறைவேற வேண்டியுள்ளது. 18 அமர்வுகளாக மொத்தம் 24 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து பாராளுமன்ற செயல்பாடுகள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முற்றிலுமாக முட்க்கினர். இதனால், பல மசோதாக்களை அறிமுகப்படுத்த முடியாமலும், நிறைவேற்ற இயலாமலும் போனது.
இந்நிலையில், கடந்தமுறை முடங்கியதுபோல் இல்லாமல் எதிர்வரும் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக பாராளுமன்ற வளாகத்தில் இன்று அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.