செய்திகள்

சியாமென் சென்றடைந்தார் பிரதமர் மோடி: சீன வாழ் இந்தியர்களுடன் சந்திப்பு

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சியாமென் நகரில் உள்ள புலம்பெயர் இந்தியர்களை சந்தித்து உரையாடினார்.

மாலை மலர்

இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு ‘‘பிரிக்ஸ்’’ எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு தடவை சந்தித்து பேசுவது வழக்கம். அவ்வகையில் 9-வது பிரிக்ஸ் மாநாடு சீனாவின் சியாமென் நகரில் இன்று முதல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது.