செய்திகள்

விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் வங்காளதேசம் பவன் - திறப்பு விழாவுக்கு ஷேக் ஹசினா வருகை

மேற்கு வங்காளம் மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வங்காளதேசம் பவன் வரலாற்று ஆய்வகம் 25-ம் தேதி திறக்கப்படுகிறது இவ்விழாவில் ஷேக் ஹசினா பங்கேற்கிறார்.#VisvaBharatiUniversity #ShiekhHasina #BangladeshBhawan

வங்காளதேசம் விடுதலைக்கு பின்னர் உள்ள வரலாற்று ஆவணங்களை பாதுகாக்க விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் திறப்பு விழாவில்  வரும் மே 25-ம் தேதி வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர்  பங்கேற்க உள்ளனர்.

வங்காளாதேசம் விடுதலை போரின் போது இந்தியா மற்றும் வங்களதேசம் தொடர்புடைய வரலாற்று ஆவணங்களை  பாதுக்காக்க பிர்பம் மாவட்டம் சாந்தி நிகேதன் பகுதியில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 35000 சதுர அடி நிலத்தை மேற்கு வங்காளம் மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.