இந்தியாவில் இன்று மாலை நிலவரப்படி 223 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்காக சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 4 பேர் உயிரிழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் எடுக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை வீடியோ கான்பிரன்சிங் வழியாக விரிவான ஆலோசனை நடத்தினார்.