செய்திகள்

பிளஸ்-1 தேர்வு முடிவு: திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்ச்சி அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியானது. திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்ச்சி அதிகரித்துள்ளது. #Plus1result

திருவள்ளூர்:

பிளஸ்-1 தேர்வு முடிவு இன்று வெளியானது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 359 பள்ளிகளில் மொத்தம் 41 ஆயிரத்து 26 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 17 ஆயிரத்து 614 பேரும், மாணவிகள் 20 ஆயிரத்து 110 பேரும் என மொத்தம் 38 ஆயிரத்து 724 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இது 94.39 சதவீதம் தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டை விட 3.54 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் 102 அரசு பள்ளிகளில் 14 ஆயிரத்து 246 பேர் தேர்வு எழுதினர். இதில் 12 ஆயிரத்து 339 பேர் தேர்ச்சி பெற்றனர். #Plus1result

SCROLL FOR NEXT