முல்லைப் பெரியாறு பிரச்சினையை பேசி தீர்ப்போம்: தமிழக முதல்வரை சந்தித்த பினராயி விஜயன் பேட்டி
முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு இரு மாநில முதல்வர்களும் பேசி தீர்வு காண்பதாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார்.
மாலை மலர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார். அவர், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.