செய்திகள்

பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மாலை மலர்

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் உட்கோட்டம் புத்திரகவுண்டன்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (6-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை புத்திர கவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர், அபிநவம், வீரக்கவுண்டனூர், காந்திநகர், தளவாய்பட்டி, தென்னம்பிள்ளையூர், ஒட்டப்பட்டி, ஓலப்பாடி, உமையாள்புரம்,

ஆரியபாளையம், பெத்தநாயக்கன்பாளையம், எரும சமுத்திரம், சின்னமசமுத்திரம், கல்யாண கிரி, கல்லேரிப்பட்டி, வைத்தியகவுண்டன்புதூர், பெரியகிருஷ்ணாபுரம், கொத்தாம்பாடி, கல்பகனூர், ராசிநகர் மற்றும் சிற்றூர்கள் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

இத்தகவலை வாழப்பாடி மின்வாரிய செயற் பொறியாளர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.