செய்திகள்

பாபநாசம் அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை

பாபநாசம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

பாபநாசம்:

பாபநாசம் அருகே மட்டையான்திடல் கிராமம் மேலத் தெருவில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 32). எலக்ட்ரீசியன். இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். சிகிச்சை பெற்றும் பலனளிக்காததால் மனமுடைந்த சரவணன் வி‌ஷம் குடித்தார். 

அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். சரவணனின் தந்தை மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews