செய்திகள்

பிரான்ஸ் வெற்றியை குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அர்பணித்த போக்பா

அரையிறுதியில் பெற்ற வெற்றியை இங்கிலாந்து வீரர் பால் போக்பா குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அர்ப்பணித்துள்ளார். #WorldCup2018 #thaicaverescue

மாலை மலர்

நேற்று பெல்ஜியத்திற்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் 1-0 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியை தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அர்பணிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

போக்பா தனது டுவிட்டர் பக்கத்தில் மீட்கப்பட்ட சிறுவர்களின் படத்தை வெளியிட்டு ‘‘இன்றைய நாளில் ஹீரோக்கள் ஆன சிறுவர்களுக்கு இந்த வெற்றி செல்கிறது. வெல்டன் பாய்ஸ், நீங்கள் எப்போதும் வலிமையானவர்கள்’’ ட்வீட் செய்துள்ளார்.