ஆவடி:
பட்டாபிராம், சத்திரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சித்ரா. இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு அன்னம்பேடு பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இரவு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைந்து கிடந்தது பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.3 ஆயிரத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருந்தனர்.