செய்திகள்

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு அமைதி பேரணி நடத்திய தொண்டர்கள்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு சென்னை அண்ணாநகர் தொகுதி திமுக தொண்டர்கள் அமைதி பேரணி நடத்தி தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர். #DMK #Karunanidhi #RIPKarunanidhi

சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 7-ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது இழப்பைத் தாங்க முடியாத தொண்டர்கள் கண்ணீரஞ்சலி, இரங்கல் கூட்டம் என பல்வேறு வழிகளில் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தி.மு.க. தலைவரின் நினைவிடத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கருணாநிதியின் நினைவிடத்துக்கு தொண்டர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சென்னை மேற்கு மாவட்டம் அண்ணா நகர் தொகுதி தி.மு.க. சார்பில் இன்று அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் தொண்டர்கள் அமைதிப் பேரணி நடத்தி வருகின்றனர். #DMK #Karunanidhi #RIPKarunanidhi