இந்நிலையில்தான் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றி விமர்சனங்கள் செய்த வாயை அடைக்கும் என பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மிக்கி ஆர்தர் கூறுகையில் ‘‘போட்டியின் தொடக்கத்தில் தோல்வியடைந்து அதன்பின் சிறப்பாக பாகிஸ்தான் விளையாடுகிறது என்பதை ஏற்க முடியாது. நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெறவே விரும்புகிறோம்.
நாங்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். ஒவ்வொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் இந்த கேள்வியைத்தான் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காகத்தான் ஒவ்வொரு நாளும் கடுமையாக பயிற்சி எடுக்கிறோம்.