செய்திகள்

2018 உலகக் கோப்பை தொடரை புறக்கணிப்போம்: பாக். ஹாக்கி பெடரேசன் மிரட்டல்

விசா, உச்சக்கட்ட பாதுகாப்பு குறித்து முழு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பையில் பங்கேற்போம் என பாகிஸ்தான் ஹாக்கி பெடரேசன் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

குறிப்பாக கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை. பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியாவில் விளையாடும்போது அநாகரிகமாக நடந்து கொண்டனர். அதற்கு மன்னிப்பு கேட்கும் வரை பாகிஸ்தானுடன் தொடர் கிடையாது என்று ஹாக்கி இந்தியா தெரிவித்திருந்தது.

ஆனால் வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் சர்வதேச தொடர்களில் இரு அணிகளும் மோதி வருகின்றன. ஹாக்கி லீக் அரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் லண்டனில் மோதியது. வங்காள தேசத்தில் அக்டோபர் மாதம் ஆசிய கோப்பை தொடரில் இரு அணிகளும் விளையாட இருக்கின்றன.