செய்திகள்

‘பத்மாவத்’ படத்துக்கு எதிராக மீண்டும் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 29-ந்தேதி விசாரணை

நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பி உள்ள ‘பத்மாவத்’ படத்தில் இடம்பெற்று இருக்கும் குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #Padmavat #DeepikaPadukone #SupremCourt

நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பி உள்ள ‘பத்மாவத்’ திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகிறது. இந்த படத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன. எனினும் அவற்றை தள்ளுபடி செய்த நீதிபதிகள், படத்தை வெளியிட தடையில்லை என அறிவித்தனர்.

இந்த நிலையில் ‘பத்மாவத்’ படத்தில் இடம்பெற்று இருக்கும் குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்க வேண்டும் எனக்கூறி மனோகர் லால் சர்மா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.