செய்திகள்

17 உயிர்களை பறித்த தீ விபத்து- டெல்லி ஓட்டல் உரிமையாளர் கைது

டெல்லியில் அர்பிட் பேலஸில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். #ArpitPalace #Delhifire #Delhihotelfire

மாலை மலர்

டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பிட் பேலஸ் ஓட்டலில் கடந்த 12-ந்தேதி அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இதில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி போலீசார் அர்பிட் பேலஸ் ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயல் என்பவரை தேடி வந்தனர். அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது.