சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கல்வெட்டு. 
செய்திகள்

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே எம்.பி.யான ஓபிஎஸ் மகன்- சமூக ஊடகங்களில் வைரலாகும் படம்

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத்குமார் என கல்வெட்டு வைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மாலை மலர்

தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அருகே சுரபிநதி செல்கிறது. இந்த நதிக்கரையில் காசி அன்னபூரணி ஆலயம் கட்டப்பட்டு வந்தது. ஆலயம் கட்டி முடித்து கும்பாபிஷேக பணிகள் நடந்த நிலையில் அதற்காக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. அதற்கு கீழே தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று ரவீந்திரநாத்குமார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.

இந்த படம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் போட்டுள்ளதற்கு எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.