திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், ஒரே நாடு ஒரே ரேசன் என்பது ஆபத்தானது. இதுபோன்ற நடவடிக்கை ஜனநாயகத்தை அடியோடு பேர்த்து எறியும் காரியமாக பார்க்கிறேன். ஜனநாயகமா?, இல்லையா? என்பது ஒன்று. மற்றொன்று மக்களுக்கு நல்லது சென்று சேர்கிறதா? இல்லை என்று பார்க்க வேண்டும். என்றார்.
மேலும், தேர்தல் நேரத்தில் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியேறுவதும், புதிய கட்சிகள் சேருவதும் இயல்பு எனவும் திமுகவினர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார் எனவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.