அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது பும்ராவின் பெருவிரலில் முறிவு ஏற்பட்டது. இங்கிலாந்துக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியின்போது புவனேஸ்வர் குமாருக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
பும்ரா முதல் இரண்டு மூன்று போட்டிகளில் பங்கேற்க முடியாது நிலையிலும், புவனேஸ்வர் குமார் எந்த போட்டியில் களம் இறங்குவார் என்பதும் தெரியாமல் உள்ளது. அவர்கள் காயம் இந்திய அணிக்கு பின்னடைவை கொடுக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஒரு புவனேஸ்வர் குமார் அல்லது பும்ராவால் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெற்றி பெற வைக்க முடியாது என்று முன்னாள் ஆல்ரவுண்டரும், இந்திய அணி பயிற்சியாளரும் ஆன மதன் லால் தெரிவித்துள்ளார்.