செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் உயிரிழந்தார். #MilitantsAttack

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள வார்போரா பகுதியில் மொகமது ரபி யாடூ என்ற ராணுவ வீரரின் வீடு அமைந்துள்ளது.

இன்று மாலை அந்த பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் யாடூ வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ராணுவ வீரர் மொகமது ரபி யாடூ படுகாயம் அடைந்தார்.

உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். 

ராணுவ வீரர் இறந்ததையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #MilitantsAttack