செய்திகள்

அரியலூரில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

அரியலூரில் ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியிடம் 7 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

மாலை மலர்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் கோவிந்தபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் அலமேலு (வயது60) அவர் அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டு இருந்தார்.

அப்போது அந்தவழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் முகவரி கேட்பது போல அவரிடம் விசாரித்து அவரின் கவனத்தை திருப்பி அவர் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து அங்கிருந்து தப்பித்து சென்றார்.

இது குறித்து அரியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இதனை அடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.